தமிழ் அறிஞர் ஒருவரின் பதிவை பகிர்கிறேன்
( ஆசிரியர்களின் மீது கூறப்படும் 99.9 % சதவீத பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை., போலியானவை.., பல்வேறு காரணங்களுக்காக ( கடன் பிரச்சினை, சங்க பிரச்சனை, சாதி பிரச்சனை, தனிப்பட்ட பிரச்சினை, போட்டி, பொறாமை போன்ற பல... ) பழிவாங்குவதற்காக மாணவிகள் மூலமாக பாலியல் புகார்களை உருவாக்கி அவற்றை சமூகவலைத்தளங்களில் ( FACEBOOK, TWITTER, WHATSAPP, YOUTUBE ) பரப்புகிறார்கள்...)
ஒருவர் ஒரு சிறிய அளவு புகழ்பெற்றாலே பலருக்கு வயிற்றெரிச்சல் வந்துவிடும்.. பழிவாங்க துடிப்பார்கள்.. விதவிதமாக முயற்சிப்பார்கள்.. ஒரு சிறிய பேனை பெருச்சாளி ஆக்குவார்கள்... ⚠️
*எனவே எதையும் நம்பாதீர்கள்...* ❌⚠️
மாநிலம் முழுவதும் ஆங்காங்கே *ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள்* சார்ந்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
*பாலியல் சார்ந்த உண்மை குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்க பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.*
எனினும்
ஆசிரியர்கள் மாணவர்களுக்கான உறவு என்பது கற்றல் கற்பித்தல் உடன் நின்றுவிடாமல் *ஒழுக்கம் சார்ந்த* கண்டிப்பையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
இன்றைய
கைபேசி இணைய உலகத்தில் படிப்பைத் தவிர மற்ற பல்வேறு நிகழ்வுகளில் மாணவர்களின் மனம் அலைந்து கொண்டிருத்தலும்,
*மதிப்பெண்* இருந்தால்
*மட்டுமே* கல்லூரியில்
இடம் கிடைக்கும் என்கின்ற சூழல் இல்லாமல்
*எந்த மதிப்பெண் எடுத்தாலும்* ஏதாவது
*ஒரு கல்லூரியில் இடம் கிடைத்துவிடும்* என்கின்ற நிலை இருப்பதாலும்,
கடந்த தலைமுறையான *கண்டிப்பான பெற்றோர்களிடம்* குழந்தைகளாக வளர்ந்து இன்றைய பெற்றோர்களாக இருக்கும் தலைமுறையினர் தாங்கள் பட்ட கட்டுப்பாடுகளை *தங்கள் குழந்தைகள் படக் கூடாது* என்கின்ற
மனநிலையில் *பெற்றோர்களும்* இருப்பதாலும்,
படிப்பு மற்றும் ஒழுக்கம் சார்ந்த விடையங்களில் *கட்டுப்பாடுகள் இன்றி* இன்றைய இளைய தலைமுறையினர் இருக்கிறார்கள்.
முதன்மை கல்வி *அலுவலர் தேர்ச்சி சதவீதம் உயர்த்த சொல்கிறார் என்றோ*
அல்லது
*நீங்கள் வளர்ந்த சூழலை மனதில் வைத்து* இன்றைய மாணவர் இடத்தில் நடந்து கொண்டாலோ
*அதைக் கூட சிக்கலாக்கிவிடும்* வாய்ப்பு உள்ளது.
எனவே
மேற்கண்ட சூழல்களில் இன்றை காலகட்டம் இருப்பதால்
ஆசிரியர்கள் *மிகுந்த உச்சபட்ச எச்சரிக்கையுடன்* மாணவர்களை கையாள வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
எல்லாவற்றிற்கும் மேலாக எல்லாவற்றையும் விட *மானமும், கௌரவமும்*
முக்கியமானது.
ஏனெனில்
அரசும்,சட்டமும் இன்றைய சமூக ஊடகங்களும் உங்களை வீழ்த்த மட்டுமே கூட்டம் கூட்டமாக வரும்.
என்பதை கவனத்தில் கொண்டு பணியாற்ற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
*தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டியவைகள்:-*
1.ஒரு பள்ளியில் தலைமையாசிரியர் முதல்
கடை நிலை ஊழியர்கள் வரை *ஈகோ இல்லாமல்* ,
*பணித் தொகுதி பாரபட்சம் பார்க்காமல்* ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
2.ஆசிரியர்களுக்கிடையேயான போட்டிகளை தீர்க்க (தனிப்பட்ட விடயங்களுக்காக) சாதி, மதம், உள்ளூர் என ஏதோ ஒரு வகையில் மாணவர்களிடம் நெருக்கம் ஏற்படுத்திக் கொண்டு மற்றோர் *ஆசிரியருக்கு எதிராக தூண்டி விடுதல்* , போன்ற எதிர்மறையான சிந்தனைகளை *முற்றிலும்* தவிர்க்க வேண்டும்.
3.ஒரு ஆசிரியருக்கு எதிராக உண்மைக்கு புறம்பான சிக்கல் வரும் போது மற்ற *அனைத்து ஆசிரியர்களும் துணையாக* நிற்க வேண்டும்.
4.பெண்கள் பள்ளிகளில்
ஆய்வகம், வகுப்பறைகள் உட்பட எந்தவொரு சூழலிலும் *மாணவிகளை தனியாக சந்திக்கும் சூழலை* முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
குறைந்த பட்சம் *மூன்று அல்லது அதற்கு அதிகமான* எண்ணிக்கையில் மாணவிகளை சந்திக்க சொல்லி அறிவுரை வழங்கி விடவும்.
5.இருபாலர் பள்ளியில் மாணவர்கள் உடன் வைத்துக் கொள்ளவும், ஆய்வகங்களுக்கு *முதலில் மாணவர்களும் இரண்டாவதாக மாணவிகளும் உள்ளே வர வேண்டும்* என்றும்,
வெளியேறும் போது *முதலில் மாணவிகள் வெளியேற வேண்டும் இரண்டாவதாக மாணவர்கள் வெளியேற வேண்டும்* போன்ற பாதுகாப்பான முறைகளை பின்பற்ற வேண்டும்.
*கவனமாக இருப்போம்*
*கற்பித்தலை மேம்படுத்துவோம்...*
Comments
Post a Comment
வருக வருக